BA (Hons), ThM, PhD
இலண்டன் இறையியல் கல்லூரியின் பட்டதாரியும், அமெரிக்காவின் டிரினிட்டி இவான்ஜலிக்கல் டிவினிட்டி கல்லூரியில் செமிட்டிக் மொழிகள் மற்றும் பழைய ஏற்பாட்டில் இறையியல் முதுகலைப் பட்டத்தையும் பெற்றவர். இவர் 2கொரிந்தியர் 4:4ல் பவுல் குறிப்பிட்டுள்ள 'இப்பிரபஞ்சத்தின் தேவன்' என்ற சொற்றொடரின் பொருளானது மீளாய்வு செய்யப்பட வேண்டுமென வாதிட்ட ஆய்வுக்கட்டுரைக்காக தென்னாபிரிக்காவின் Cape Town பல்கலைக்கழகத்தில் சமயக் கற்கைகளுக்கான முனைவர் பட்டத்தையும் பெற்றவர். கொள்ளுப்பிட்டி மெதடிஸ்த திருச்சபையில் தலைமைத்துவ அங்கத்தினராகவும், பிரசங்கித்தல், வாலிபருக்கான வழிகாட்டுதல் மற்றும் ஓய்வுநாள் பாடசாலையில் 13-17 வயதுப் பிரிவினருக்கு கற்பித்தல் உள்ளிட்ட பிரதான ஊழியங்களுடன் லொசேன் அமைப்பின் இறையியல் பணிக்குழுவின் இணைத் தலைவராகவும் ஊழியம் செய்கிறார்.
DipAgri, BTh, BA, MA
இலங்கை திறந்த பல்கலைக்கழகம் மற்றும் CTS ஆகியவற்றின் பட்டதாரியான இவர், Dallas இறையியல் கல்லூரியில் வேதாகம கற்கைநெறியில் முதுகலைப்பட்டத்தை பெற்றுள்ளதுடன் முன்னோடியான திருச்சபைகளை ஸ்தாபிப்பதில் பல வருட அனுபவம் வாய்ந்தவர். பண்டைய மத்திய கிழக்கு மற்றும் வேதாகம புவியியல் பற்றிய அறிவில் சிறப்பு வாய்ந்தவராதலால் இலங்கை வெளியீடுகள் பலவற்றில் வரைபடங்களுக்கான பிரதான வளவாளராகவும் விளங்குகிறார். வாழும் கிறிஸ்து திருச்சபையின் திருநிலைப்படுத்தப்பட்ட ஊழியராவார்.
கொழும்பு இறையியல் கல்லூரியின் உதவி கல்விப்பீடாதிபதியான், இவர், தெற்காசிய இறையியல் கல்லூரியில் (SAIT, இலங்கை), இறையியல் கற்கைகள் மற்றும் திருத்தூதுப் பணிக்கான ஆசிய மையம் (ACTS, தென் கொரியா) ஆகியவற்றின் பட்டதாரியும் ஆவார். தற்போது தென்னாபிரிக்க இறையியல் கல்லூரியில் (தென்னாபிரிக்கா) இறையியலில் முதுகலைமாணியை மேற்கொண்டு வருகிறார். இவர், கிறிஸ்துவின் ஸ்தானாதிபதிகள் (AMBASSADORS FOR CHRIST INTERNATIONAL) என்ற சர்வதேச அமைப்பின் ஊழிய உறுப்பினராகவும், கருக்கலைப்பிலிருந்து மீண்டு உயிர்வாழ்பவர்களின் வலையமைப்பின் (Abortion Survivors Network) சர்வதேச கருக்காப்பிற்கான (Pro-Life) பேச்சாளராகவும் திகழ்கின்றார். சிலாபம், புனித யாக்கோபின் (St.James) திருச்சபையை தனது ஆராதிக்கும் சபையாக கொண்டுள்ளார்.
CTS-ன் பட்டதாரியான இவர், நீர்கொழும்பு கொச்சிக்கடையின் கித்து செவன ஊழியங்கள் திருச்சபையில் போதகராக அதிக ஆண்டுகளாக ஊழியம் செய்துள்ளதுடன், கித்து செவன சீஷத்துவ பயிற்சி நிலையத்தின் ஆசிரியராகவும், உதவி முதல்வராகவும் சேவையாற்றி உள்ளார். ஆற்றுப்பணி ஊழியத்தில் ஈடுபட்டு வருவதுடன், இலங்கை மன்ற கல்லூரியில் ஆற்றுப்பணிக்கான உயர் தேசிய பட்டச்சான்றிதழை பெற்றவர்.
CTS-ன் ஆவிக்குரிய உருவாக்கத்தின் ஒருங்கிணைப்பாளரான இவர், CTS-ன் பட்டதாரியும், ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் உயிரியல் விஞ்ஞான பட்டதாரியும், தென்கொரியாவின் டோர்ச் டினிட்டி கிராஜுவேட் பல்கலைக்கழகத்தில் கிறிஸ்தவ கல்வியில் 2007-ல் முதுகலைப் பட்டத்தையும் 2020-ல் கல்வி கற்கையில் முனைவர் பட்டத்தையும் பெற்றவர். கற்பித்தல் மற்றும் ஊழியத்தில் 20 வருடத்திற்கும் மேலாக அனுபவம் வாய்ந்தவர். All Nations Church Sri Lanka திருச்சபையில் அங்கத்துவம் வகிக்கிறார்.
கொழும்பு இறையியல் கல்லூரியின் பட்டதாரியான இவர், கொரிய சர்வதேச இறையியல் கல்லூரியில் பழைய ஏற்பாட்டிலும், புதிய ஏற்பாட்டிலும் கிறிஸ்தவம் என்ற பாடநெறியில் சான்றிதழை பெற்றவர் ஆவார். CTS-ல் பல வருடங்களாக வருகைதரு கல்விப்பீட உறுப்பினராக பணியாற்றியுள்ளதுடன், அதன் தமிழ்மொழி மூலமான மாகாண கல்வி நிலையங்களில் பரவலாக கற்பித்துள்ளார். கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக வத்தளை, சீயோன்மலை கூடார திருச்சபையின் தலைமை போதகராக ஊழியமாற்றி வரும் இவர், தேசிய கிறிஸ்தவ ஊழியர்களின் ஐக்கியத்தின் பொதுச்செயலாளராகவும் கடமையாற்றுகிறார்.
உவீட்டன் கல்லூரியில் (அமெரிக்கா) வரலாற்று இறையியலில் முதுகலைப்பட்டம் பெற்றவரும், ஐக்கிய இராச்சிய பர்மிங்காம் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட மாணவரும் ஆவார். இறையியல்சார் மானுடவியலில் கவனம் செலுத்துவதோடு, அவர் வரலாறு மற்றும் முறைசார் இறையியலில் நிபுணத்துவத்தை பெற்றிருக்கிறார். அவர் போதகப்பணி மற்றும் கல்விப்பீட கற்பித்தலை ஒருங்கிணைத்து தன்னுடைய மிகவும் ஆழமான கருத்தினை வெளிப்படுத்துவதானது கல்விப்புலமைக்கும், நடைமுறை சுவிசேஷப் பணிக்கும் பாலமாக விளங்குகிறது. அவருடைய பணியானது திருச்சபை வரலாறு மற்றும் கோட்பாட்டு விருத்தியில் மிகச் செழுமையான இறையியலை புரிந்து கொள்வதற்கு மாணவர்களையும், திருச்சபை சமூகங்களையும் ஊக்குவிக்கிறது.
CTS சிறுவர் ஊழிய களத்தின் ஒருங்கிணைப்பாளரும், CTS-ன் பட்டதாரியும் ஆவார். ஏறத்தாழ 20 ஆண்டுகளாக ஞாயிறு பாடசாலை மற்றும் முன்பள்ளியில் ஆசிரியையாக கடமையாற்றி உள்ளதுடன், 'சிறுவர் சுவிசேஷ ஐக்கிய' (CEF) அமைப்பினது மொரட்டுவ கிளையின் பணிப்பாளராகவும் பணியாற்றி உள்ளார். தற்போது இவர் தனது முனைவர் பட்டத்திற்காக பிலிப்பைன்ஸில் உள்ள ஆசிய-பசுபிக் நாசரேன் இறையியல் கல்லூரியில் (APNTS) பரிபூரண சிறுவர் அபிவிருத்தி தொடர்பில் இறுதி ஆய்வுக்கட்டுரை தொடர்பான ஆய்வில் ஈடுபட்டுள்ளார்.
இணை/ வருகைதரு விரிவுரையாளர்கள்
கொழும்பு இறையியல் கல்லூரியின் பட்டதாரியான இவர், கணக்காளராக பணியாற்றுகிறார். கடந்த இரு தசாப்தங்களாக யுத்தம் மற்றும் பேரழிவுகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்காக கிறிஸ்தவ சர்வதேச உதவி அமைப்புகளுடன் ஒன்றிணைந்து பங்காற்றி உள்ளார். இவர் வத்தளை ஜெய ஜீவிய திருச்சபையை தனது ஆராதிக்கும் திருச்சபையாக கொண்டுள்ளார்.
கொழும்பு இறையியல் கல்லூரியின் பட்டதாரியான இவர் AOG திருச்சபையினை தனது ஆராதிக்கும் சபையாக கொண்டுள்ளதுடன், அதன் போதகராகவும் பணியாற்றி வருகிறார். மேலும் திருச்சபைகளில் கற்பித்தல், பிரசங்கித்தல் தலைமைத்துவ பயிற்சியளித்தல் மற்றும் வேதாகம கல்லூரியில் கற்பித்தல் போன்ற பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்.
கொழும்பு இறையியல் கல்லூரியின் பட்டதாரியான இவர் campus Crusade நிறுவனத்தின் பல்கலைக்கழக ஊழியத்தின் நிதி முகாமையாளராகவும், சபை ஸ்தாபித்தல் இயக்கத்தின் இணைப்பாளராகவும் கடமையாற்றி உள்ளார். நீண்ட காலமாக முழுநேரப்பணியில் ஈடுபட்டு வரும் இவர் தற்பொழுது இரட்சணியசேனை சபையின் கல்வி இணைப்பாளராகவும், சபைகளில் சீஷத்துவ பயிற்சியளித்தல், கற்பித்தல், பிரசங்கித்தல், வேதாகம கல்லூரிகளில் கற்பித்தல் போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகிறார். கொழும்பு, கொம்பனித்தெரு, இரட்சணியசேனை திருச்சபையை தனது ஆராதிக்கும் சபையாக கொண்டுள்ளார்.
கொழும்பு இறையியல் கல்லூரியின் இளமாணி பட்டதாரியும், பகுதி நேர கல்விப்பீட உறுப்பினருமான இவர் தற்போது மருத்துவ உளவியல் முதுமாணி பட்டப்படிப்பினை கற்றுக்கொண்டிருக்கிறார். இலங்கை வேர்ல்ட் விஷன் நிறுவனத்தில் 15 ஆண்டுகளுக்கு மேலாகவும், இலங்கை இரட்சணிய சேனை தலைமையகத்தில், சிறுவர் நிகழ்ச்சி திட்டங்கள் தொடர்பான அறிவுரை ஆலோசகராகவும் மற்றும் வெஸ்லி கல்லூரியில் மாணவ ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார். சிறுவர் உரிமை செயற்பாட்டாளராக இருப்பதுடன், திருச்சபைகள் மற்றும் கிறிஸ்தவ நிறுவனங்களுடன் இணைந்து ஆலோசகராக பணிபுரிந்து வருகின்றார்.
நோர்ட்டன் பிரிட்ஜ் SAIT கலாசாலையில் இளமாணி பட்டத்தையும் வேல்ஸ்ஸின் Bangor பல்கலைக்கழகத்தில் நடைமுறை இறையியலில் முதுமாணி பட்டத்தையும் Global Institute of Theology (WCRC)-ல் சீர்திருத்த இறையியல் பட்டத்தையும் பெற்ற இவர் கண்டி City Mission நிறுவனத்தின் நிகழ்ச்சி ஒருங்கமைப்பாளராகவும், உள்ளுர் மற்றும் வெளியூர் வேதாகம கலாசாலைகளில் விரிவுரையாளராகவும், தனது உள்ளூர் திருச்சபையில் இளைஞர் ஊழிய பணியாளராகவும் மூப்பராகவும் சேவை ஆற்றுகின்றார். கண்டி, பிரஸ்படேரியன் திருச்சபையை தனது ஆராதிக்கும் சபையாக கொண்டுள்ளார்.
கொழும்பு இறையியல் கல்லூரியின் பட்டதாரியும், Ragama, Thuduwegedera-ல் அமைந்துள்ள Prayer Tower திருச்சபையில் உதவி போதகராக ஊழியமாற்றி வருவதோடு, அதனை தனது ஆராதிக்கும் சபையாகவும் கொண்டுள்ளார். தற்போது இலங்கை, Infinity Centre for Higher Studies-ன் முழு இலங்கைக்குமான நிர்வாக ஒருங்கிணைப்பாளராக கடமையாற்றி வருவதோடு, இலங்கையில் பல பாகங்களுக்கும் சென்று வேதாகம பாடங்களையும், பிரசங்கங்களையும் மேற்கொள்வதுடன், போதைப்பொருட்களுக்கு அடிமையாகி உள்ளவர்களை புனரமைக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளார்.
இவர் கல்குடா சுவிசேஷ பயிற்சி நிலையத்தின் அதிபராகவும் மெதடிஸ்த சபையின் வடகிழக்கு பிரதேச தலைவராகவும், திருப்பேரவை காரியதரிசியாகவும் கடமையாற்றி உள்ளார். நீண்ட காலமாக மெதடிஸ்த திருச்சபையினை தனது ஆராதிக்கும் சபையாக கொண்டிருப்பதுடன், அதன் போதகராகவும் பணியாற்றி வருகின்றார்.
கொழும்பு இறையியல் கல்லூரியிலும் அதன் யாழ்ப்பாண கல்வி நிலையத்திலும் முன்னாள் பகுதி நேர விரிவுரையாளராக சேவை செய்துள்ள இவர் சிங்கப்பூர் திரித்துவ இறையியல் கல்லூரியின் இளமாணி மற்றும் முதுமாணி பட்டதாரியாவார். இலங்கை தேசிய கிறிஸ்தவ சுவிசேஷ கூட்டணியின் முன்னாள் தலைவராகவும், இலங்கை கிறிஸ்தவ சீர்திருத்த திருச்சபையின் முன்னாள் தலைவராக பணியாற்றி இருப்பதுடன், தற்போது அதன் செயலாளராகவும், அதன் இறையியல் கல்வியகத்தின் அதிபராகவும், தெஹிவலை சபையின் போதகராகவும் பணியாற்றுவது குறிப்பிடத்தக்கது. மேலும், இலங்கை தேசிய கிறிஸ்தவ மன்றத்தின் திருச்சபை ஒருமைப்பாட்டுக்கான ஆணைக்குழுவின் தற்போதைய தலைவரும் ஆவார்.
கொழும்பு இறையியல் கல்லூரியின் பட்டதாரியும், சமூக அபிவிருத்தி தேசிய நிறுவனத்தின் (National Institute of Social Development) ஆற்றுப்பணியில் பட்டச்சான்றிதழை பெற்றவருமாவார். இவர், தெமட்டகொட, கிரேஸ் வேதாகம நிறுவனத்தின் வேதாகம கல்வி ஆசிரியராக பணியாற்றி உள்ளதுடன், குடும்பங்கள் மத்தியிலே ஆற்றுப்பணியில் ஈடுபட்டு வருகிறார். வத்தளை, சீயோன்மலை கூடார திருச்சபையை தனது ஆராதிக்கும் சபையாக கொண்டுள்ளதுடன், அதன் நிர்வாக சபையின் காரியதரிசியாகவும், ஞாயிறு பாடசாலை கண்காணிப்பாளராகவும் சேவை செய்து வருகிறார்.
Mission to Asia (இந்தியா), Infinity Centre for Higher Studies (இலங்கை) ஆகியவற்றின் ஸ்தாபக இயக்குனராவார். இந்தியாவின், எம்.கே பல்கலைக்கழகம் (கணணி விஞ்ஞான தொழிநுட்பவியல் [BE]), புனித. பவுல் இறையியல் கல்லூரி (பிரயோக இறையியலில் முதுமாணி), மார்ட்டின் லூத்தர் பல்கலைக்கழகம் (கிறிஸ்தவ முகாமைத்துவ கற்கைநெறி) போன்றவற்றில் பட்டம் பெற்றவராவார். தெற்காசியாவின் பல்தரப்பட்ட திருத்தூதுப்பணி செயற்பாடு அமைப்புகளின் உறுப்பினரும், இலங்கையில் தகவல் தொழில்நுட்ப கைத்தொழில் அமைப்பு நிர்வாகக்குழுவின் அங்கத்தவரும் ஆவார். (கல்விப்பிரிவு). வெள்ளவத்தை, மூர் வீதியில் அமைந்துள்ள மெதடிஸ்த திருச்சபையை தனது ஆராதிக்கும் சபையாக கொணடுள்ளார்.
யாழ் பல்கலைக்கழகத்தின் பட்டதாரியான இவர் பல்கலைக்கழக கிறிஸ்தவ மாணவர்கள் ஜக்கியத்துடன் (FOCUS) இணைந்து பல்கலைக்கழக கிறிஸ்தவ மாணவர்கள் மத்தியில் பணியாற்றி வருகிறார். இவர் யாழ்ப்பாணத்தில் உள்ள சீயோன் திருச்சபையினை தனது ஆராதிக்கும் சபையாக கொண்டுள்ளார்.
கொழும்பு இறையியல் கல்லூரியின் முன்னாள் கல்விப்பீட உறுப்பினரான இவர், AOG கைதடி சபையினை தனது ஆராதிக்கும் சபையாக கொண்டுள்ளதுடன், அதன் தலைமை போதகராகவும் சேவையாற்றுகிறார். அத்துடன் “Simply mobilizing SL”-ன் தேசிய இணைப்புக்குழுவின் அங்கத்தவராகவும், சிவில் உரிமை அமைப்பாகிய யாழ் மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் இணையத்தின் அங்கத்தவரும் ஆவார்.
கொழும்பு இறையியல் கல்லூரி இணைக் கல்வியின் முன்னாள் முகாமையாளராகவும் கல்விப்பீட உறுப்பினராகவும் பணியாற்றிய இவர் இக்கல்லூரியின் பட்டதாரியும் ஆவார். ஐக்கிய இராஜ்ஜிய வேல்ஸ் தேசத்து Glamorgan பல்கலைக்கழக முதுமாணி பட்டத்தை பெற்ற இவர், தற்போது கற்பித்தல், இறையியல் புத்தகங்களை எழுதுதல் மற்றும் பிரசங்க பணியில் ஈடுபட்டு வருகிறார். காலிமுகம், கிறிஸ்துநாதர் ஆலயத்தினை தனது ஆராதிக்கும் சபையாக கொண்டுள்ளார்.
கொழும்பு இறையில் கல்லூரியின் பட்டதாரியான இவர் கிறிஸ்துவுக்காக இளைஞர் பணியில் 26 வருட பணி அனுபவத்தோடு பல புதிய பிரதேசங்களில் ஊழியங்களை ஆரம்பிக்க தற்போது வரை தேவனால் பயன்படுத்தப்பட்டு வருகின்ற பாத்திரம் ஆவார். தற்போது இலங்கை சிறைச்சாலைகள் ஐக்கிய ஊழியத்தின் தேசிய இயக்குனராக பணியாற்றி வருகிறார். இவர் மெதடிஸ்த திருச்சபையை தனது ஆராதிக்கும் சபையாக கொண்டுள்ளார்.
யாழ் இறையியல் கல்லூரியின் பட்டதாரியான இவர், கிறிஸ்துவுக்காக இளைஞர் ஸ்தாபனத்தில் 15 வருடங்களுக்கும் மேலாக பணியாற்றியவர் ஆவார். தற்போது H.C.F அமைப்பின் வட பிராந்திய பொறுப்பாளராக பணியாற்றுகிறார். இவர் யாழ்ப்பாணம், AOG திருச்சபையை தனது ஆராதிக்கும் சபையாக கொண்டுள்ளார்.
கொழும்பு இறையியல் கல்லூரியின் பட்டதாரியான இவர், கிறிஸ்துவுக்காக இளைஞர் ஸ்தாபனத்தில் பயிற்சி நிர்வாக இயக்குனராகவும், சப்பிரகமுவா, களுத்துறை பிரிவுகளுக்கு ஊழிய பொறுப்பாளராகவும் பணியாற்றி வருகிறார். கடந்த 30 ஆண்டுகளாக யாழ்ப்பாணம், மன்னார், மட்டக்களப்பு, கொழும்பு பகுதிகளில் இளைஞர்கள் மத்தியில் ஊழியம் செய்வதோடு இளம் தலைவர்களுக்கு பயிற்சி கொடுப்பவராகவும் பணியாற்றி வருகிறார். இவர் வெள்ளவத்தை, மூர் வீதியிலுள்ள மெதடிஸ்த திருச்சபையை தனது ஆராதிக்கும் சபையாக கொண்டுள்ளார்.
கொழும்பு இறையியல் கல்லூரியின் இளமாணி பட்டத்தையும், தலைமைத்துவத்திற்கான சர்வதேச பட்டதாரி கல்லூரியில் (பிலிப்பைன்ஸ்) (IGSL) இறையியல்சார் முதுமாணி பட்டத்தையும் (MDiv) பெற்றுள்ளார். 30 வருடங்களுக்கும் மேலாக பல்தரப்பட்ட சேவைத்துறைகளில் ஊழிய அனுபவம் மிக்கவரும், தற்போது ஊவா, கிழக்கு மற்றும் மேற்கு பிரதேசங்களில் முன்னோடி ஊழியர்களுக்கு ஊழிய வழிநடத்துனராகவும் உள்ளார். மேலும், இடர்பாடுகளை சந்திக்கும் திருச்சபைகளுக்கு ஊழியம் செய்கிற நிவ் ஹார்வர்ஸ்ட் பவுண்டேஷன் நிறுவனத்தின் தேசிய இயக்குனராகவும் பணியாற்றி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் ஜீவனுள்ள கிறிஸ்துவின் திருச்சபையை தனது ஆராதிக்கும் சபையாக கொண்டுள்ளார்.
வேதாகம ஆலோசனைப்பணியில் AGBC இறையியல் கல்லூரியின் முதுமாணி பட்டதாரியான இவர், AOG வேதாகம கல்லூரி விரிவாக்க மையத்தின் யாழ் கிளையினுடைய இணைப்பாளரும், AOG கோப்பாய் திருச்சபையின் ஸ்தாபகரும், தலைமை போதகரும் ஆவார்.