CTS கல்விப்பீடம்

img

ஐவோ பூபாலன்
முதல்வர்
BA (Hons), ThM, PhD
CTS-ன் முதல்வர். இலண்டன் இறையியல் கல்லூரியின் பட்டதாரியும், அமெரிக்காவின் டிரினிட்டி இவான்ஜலிக்கல் டிவினிட்டி கல்லூரியில் செமிட்டிக் மொழிகள் மற்றும் பழைய ஏற்பாட்டில் இறையியல் முதுகலைப்பட்டத்தையும் தென்னாபிரிக்காவின் Cape Town பல்கலைக்கழகத்தில் சமயக்கற்கைகளுக்கான முனைவர் பட்டத்தையும் பெற்றவர். கொள்ளுப்பிட்டி மெதடிஸ்த திருச்சபையில் தலைமைத்துவ அங்கத்தினராகவும், பிரசங்கித்தல், வாலிபருக்கான வழிகாட்டுதல் மற்றும் ஓய்வுநாள் பாடசாலையில் 13-17 வயதுப்பிரிவினருக்கு கற்பித்தலுள்ளிட்ட பிரதான ஊழியங்களுடன் Lausanne அமைப்பின் இறையியல் பணிக்குழுவின் இணைத்தலைவராகவும் ஊழியம் செய்கிறார்.

ரவீன் கல்தேரா
கல்விப்பீடாதிபதி
DipAgri, BTh, BA, MA
CTS-ன் கல்விப்பீடாதிபதியான இவர், இலங்கை திறந்த பல்கலைக்கழகம் மற்றும் CTS-ன் பட்டதாரியுமாவார். Dallas இறையியல் கல்லூரியில் வேதாகம கற்கைநெறியில் முதுகலைப்பட்டத்தை பெற்றுள்ளதுடன் பல்தரப்பட்ட ஊழியங்களை ஆரம்பிப்பதில் பல வருட அனுபவம் வாய்ந்தவர். பண்டைய மத்திய கிழக்கு மற்றும் வேதாகம புவியியல் பற்றிய அறிவில் சிறப்பு வாய்ந்தவராதலால் இலங்கை வெளியீடுகள் பலவற்றில் வரைபடங்களுக்கான பிரதான வளவாளராகவும் விளங்குகிறார். வாழும் கிறிஸ்து திருச்சபையின் திருநிலைப்படுத்தப்பட்ட ஊழியராவார்.

மனோ இம்மானுவேல்
கல்வி முன்னேற்றத்திற்கான தலைவர்
FCCA, BTh, MA, PhD
CTS-ன் கல்வி முன்னேற்றத்திற்கான தலைவரான இவர், இலண்டன் இறையியல் கல்லூரியின் பட்டதாரியும், பட்டப்படிப்புகளுக்கான ஆசிய இறையியல் கல்லூரியின் (பிலிப்பைன்ஸ்) சமாதான கற்கையில் முனைவர் பட்டத்தை பெற்றவருமாவார். உள்ளுர் மெதடிஸ்த திருச்சபையில் பிரசங்கியாளராகவும் விசுவாசத்திற்கான புரிந்துணர்வு: கிறிஸ்தவ கோட்பாடுகளுக்கான அறிமுகம் நூலின் எழுத்தாசிரியருமாக திகழுகின்ற இவர், CTS-ன் முன்னாள் கல்விப்பீடாபதியும், இலண்டன் வெஸ்ட் என்ட்-இல் முன்னாள் கணக்கியலாளராக பணியாற்றியவருமாவார்.

ஜூலியன் தேவதாசன்
BTh, MDiv
கொழும்பு இறையியல் கல்லூரியின் உதவி கல்விப்பீடாதிபதியான இவர், சர்வதேச ஊழிய களங்களிலும் தூதுப்பணிகளிலும் பங்குக்கொள்வதோடு கிறிஸ்துவின் ஸ்தானாதிபதிகள் (AMBASSADORS FOR CHRIST INTERNATIONAL) என்ற சர்வதேச அமைப்பின் ஊழிய உறுப்பினராகவும் திகழ்கின்றார். கருக்கலைப்பிலிருந்து மீண்டு உயிர்வாழ்பவர்களின் வலையமைப்பு (Abortion Survivors Network) என்ற சர்வதேச அமைப்பின் உறுப்பினரும் அதன் சர்வதேச கருக்காப்பிற்கான (Pro-Life) பேச்சாளருமாவார். இரு தசாப்தங்களாக இறைபணியிலே ஈடுபட்டு கொண்டிருக்கிறார். இவர் சிலாபம், புனித யாக்கோபின் (St.James) திருச்சபையை தனது ஆராதிக்கும் சபையாக கொண்டுள்ளார்.

ஈன்ஸ்டின் பெர்ணான்டோ
HND (Counselling), BTh, PgDip (BAPC)
CTS-ன் பட்டதாரி. நீர்கொழும்பு கொச்சிக்கடையின் கித்து செவன ஊழியங்கள் திருச்சபையில் உதவிப்போதகராகவும், போதகராகவும் அதிக ஆண்டுகளாக ஊழியம் செய்துள்ளதுடன், கித்து செவன சீஷத்துவ பயிற்சி நிலையத்தின் ஆசிரியராகவும், ஒருங்கிணைப்பாளராகவும் மற்றும் உதவி முதல்வராகவும் சேவையாற்றியுள்ளார். ஆற்றுப்பணி ஊழியத்தில் ஈடுபட்டு வருவதுடன், இலங்கை மன்ற கல்லூரியில் ஆற்றுப்பணிக்கான உயர் தேசிய பட்டச்சான்றிதழை பெற்றவர். கித்து செவன திருச்சபையின் அங்கத்தவர்.

சனத் அத்துகோரள
BSc, BTh, MA, PhD
CTS-ன் ஆவிக்குரிய உருவாக்கத்தின் ஒருங்கிணைப்பாளரான இவர், CTS-ன் பட்டதாரியும், ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழக்கத்தின் உயிரியல் விஞ்ஞான பட்டதாரியும், தென்கொரியாவின் டோர்ச் டினிட்டி கிராஜுவேட் பல்கலைக்கழகத்தில் கிறிஸ்தவ கல்வியில் 2017-ல் முதுகலைப்பட்டத்தையும் 2020-ல் கல்வி கற்கையில் முனைவர் பட்டத்தையும் பெற்றவர். கற்பித்தல் மற்றும் ஊழியத்தில் 20 வருடத்திற்கும் மேலாக அனுபவம் வாய்ந்தவர். All Nations Church Sri Lanka திருச்சபையில் அங்கத்துவம் வகிக்கிறார்.

திலீப் குணவீர
BTh, MA (candidate)
CTS-ன் பட்டதாரியும், அதன் வட மத்திய மாகாண கல்வி நிலையத்தின் ஒருங்கிணைப்பாளரும் ஆவார். முன்னர் கல்வாரி திருச்சபையின் ஹங்வெல கிளையின் உதவிப்போதகராகவும், மொரட்டுவ கிளை சிங்கள பிரிவின் போதகராகவும் ஊழியம் செய்துள்ளார். தற்போது அனுராதபுரத்தில் உள்ள இலங்கை திருச்சபையில் பொதுநிலை பிரசங்கியாகவும், தலைவராகவும் ஊழியம் செய்கிறார்.

செல்லதுரை ஜோண்சன் சந்திரசேகர்
BTh, MA (candidate)
கொழும்பு இறையியல் கல்லூரியின் கல்விப்பீட உறுப்பினரும், பட்டதாரியுமான இவர், கொரிய சர்வதேச இறையியல் கல்லூரியில் பழைய ஏற்பாட்டிலும், புதிய ஏற்பாட்டிலும் கிறிஸ்தவம் என்ற பாடநெறியில் சான்றிதழை பெற்றவராவார். வத்தளை, சீயோன்மலை கூடார திருச்சபையினை தனது ஆராதிக்கும் சபையாக கொண்டுள்ளதுடன், அதன் தலைமை போதகருமாவார். அத்துடன் வடகொழும்பு போதகர் ஐக்கியத்தின் செயலாளர் நாயகமாகவும் கடமையாற்றுகிறார்.

இராஜாராம் ஹரிஹரன்
BTh, MMin
கொழும்பு இறையியல் கல்லூரியின் மாகாண கல்வி நிலையங்களின் முகாமையாளரான இவர், சிங்கப்பூர் திரித்துவ இறையியல் கல்லூரியில் இளமாணி, முதுமாணி பட்டங்களை பெற்றுள்ளதுடன், மிக நீண்ட காலமாக இளைஞர் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். வெள்ளவத்தை மூர் வீதியில் அமைந்துள்ள மெதடிஸ்த திருச்சபையை தனது ஆராதிக்கும் சபையாக கொண்டுள்ளார்.

நத்தானியேல் சோமநாதன்
BEng, MA
உவீட்டன் கல்லூரியில் (அமெரிக்கா) வரலாற்று இறையியலில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தெகிவளை கிறிஸ்தவ எழுப்புதலின் திருச்சபையில் இணைப்போதகராக ஊழியமாற்றுகிறார். சபை தலைவர்களின் வினைத்திறனான ஊழியத்திற்கு தகுந்த பயிற்சிகளையும் வளங்களையும் வழங்குவதோடு‚ இறையியல் கலந்துரையாடல் மற்றும் கருத்தரங்குகளை ஒழுங்குபடுத்துவது இவரது முக்கிய குறிக்கோளாக இருக்கிறது. தற்போது பெர்மிங்ஹாம் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்திற்கான கற்கையில் ஈடுபட்டுள்ளார்.

வனஜா ராஜ்குமார்
BTh, MA (candidate)
கொழும்பு இறையியல் கல்லூரியின் உதவி நூலகவியலாளராகவும், வடகொழும்பு நிலையத்தின் ஒருங்கிணைப்பாளராகவும் பணியாற்றுகிறார். பெண்கள் மற்றும் சிறுவர் ஊழியங்களில் ஈடுபட்டு வருவதுடன்,இலங்கை வேதாகம சங்கத்தின் 'Master Facilitator in Healing the Wounds of Trauma Children’ பயிற்சியை பெற்றவரும், 'தாயின் வடிவமைப்பு" என்பதின் சிரேஷ்ட வளவாளருமாவார். சத்திய வசனம் நிறுவனத்தின் தமிழ்ப்பிரிவு நிர்வாக ஒருங்கிணைப்பாளராக நான்கு ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். கொழும்பு-13, ஜிந்துப்பிட்டி, புனித தோமாவின் ஆலயத்தினை தனது ஆராதிக்கும் சபையாக கொண்டுள்ளார்.

கிருஷ்ணி எதிரிசிங்க
BTh, MA (candidate)
CTS சிறுவர் ஊழிய களத்தின் ஒருங்கிணைப்பாளராவார். ஏறத்தாழ 20 ஆண்டுகளாக ஞாயிறு பாடசாலை மற்றும் முன்பள்ளியில் ஆசிரியையாக கடமையாற்றி உள்ளதுடன், 'சிறுவர் சுவிசேஷ ஐக்கிய' (CEF) அமைப்பினது மொரட்டுவ கிளையின் பணிப்பாளராகவும் பணியாற்றி உள்ளார். தற்போது இவர் தனது முனைவர் பட்டத்திற்காக பிலிப்பைன்ஸில் உள்ள ஆசிய-பசுபிக் நாசரேன் இறையியல் கல்லூரியில் (APNTS) பரிபூரண சிறுவர் அபிவிருத்தி தொடர்பில் இறுதி ஆய்வுக்கட்டுரையை மேற்கொண்டு வருகிறார்.

இணை/ வருகைதரு விரிவுரையாளர்கள்

கிறிஸ்துமணி செல்லையா
DipEng (Mech), BTh, MA
கொழும்பு இறையியல் கல்லூரியின் பட்டதாரியான இவர் Campus Crusade நிறுவனத்தின் பல்கலைக்கழக ஊழியத்தின் நிதி முகாமையாளராகவும், சபை ஸ்தாபித்தல் இயக்கத்தின் இணைப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார். நீண்ட காலமாக முழுநேரப்பணியில் ஈடுபட்டு வரும் இவர் தற்பொழுது இரட்சணியசேனை சபையின் கல்வி இணைப்பாளராகவும், சபைகளில் சீஷத்துவ பயிற்சியளித்தல், கற்பித்தல், பிரசங்கித்தல், வேதாகம கல்லூரிகளில் கற்பித்தல் போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகிறார். கொழும்பு, கொம்பனித்தெரு, இரட்சணியசேனை திருச்சபையை தனது ஆராதிக்கும் சபையாக கொண்டுள்ளார்.

கிறிஸ்ரி பாலேந்திரன்
BD, Certificate in Counselling CWR-UK, MA (candidate)
இவர் சேராம்பூர் பல்கலைக்கழகத்தின் பட்டதாரியும், சர்வதேச வேதாகம கழகத்தின் இலங்கைக்கான இயக்குனருமாவார். கற்பித்தல் பணியில் நீண்ட கால அனுபவமுடையவரும், பயிற்றுவிக்கப்பட்ட ஆசிரியரும் ஆவார். இவர் மூர் வீதியிலுள்ள மெதடிஸ்த திருச்சபையை தனது ஆராதிக்கும் சபையாக கொண்டுள்ளார்.

காமினி ஜயந்த
BTh, MSW (candidate)
கொழும்பு இறையியல் கல்லூரியின் பட்டதாரியும், Ragama, Thuduwegedera-ல் உள்ள Prayer Tower Church-ல் துணை போதகராகவும், தனது ஆராதிக்கும் சபையாகவும் கொண்டுள்ளதுடன், தற்போது Infinity Centre for Higher Studies(இலங்கை)-ன் முழு இலங்கைக்குமான நிர்வாக ஒருங்கிணைப்பாளராக கடமையாற்றுகிறார். அத்துடன் இலங்கையில் பல பாகங்களுக்கும் சென்று வேதாகம பாடங்களையும், பிரசங்கங்களையும் மேற்கொள்வதுடன், போதைப்பொருட்களுக்கு அடிமையாக உள்ளவர்களை புனரமைக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளார். அத்துடன் கொழும்பு இரட்சண்ய சேனையில் பகுதி நேர விரிவுரையாளராக கடமையாற்றுவதுடன், தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்தில் முதுமாணி பட்டப்படிப்பையும் தொடர்கிறார்.

கிறிஸ்டி சாமுவேல்
BE (Comp Sci), MA, EPCM
Mission to Asia (இந்தியா), Infinity Centre for Higher Studies (இலங்கை) ஆகியவற்றின் ஸ்தாபக இயக்குனராவார். இந்தியாவின், எம்.கே பல்கலைக்கழகம் (கணணி விஞ்ஞான தொழிநுட்பவியல் [BE]), புனித. பவுல் இறையியல் கல்லூரி (பிரயோக இறையியலில் முதுமாணி), மார்ட்டின் லூத்தர் பல்கலைக்கழகம் (கிறிஸ்தவ முகாமைத்துவ கற்கைநெறி) போன்றவற்றில் பட்டம் பெற்றவராவார். தெற்காசியாவின் பல்தரப்பட்ட திருத்தூதுப்பணி செயற்பாடு அமைப்புகளின் உறுப்பினரும், இலங்கையில் தகவல் தொழில்நுட்ப கைத்தொழில் அமைப்பு நிர்வாகக்குழுவின் அங்கத்தவருமாவார் (கல்விப்பிரிவு). வெள்ளவத்தை, மூர் வீதியில் அமைந்துள்ள மெதடிஸ்த திருச்சபையை தனது ஆராதிக்கும் சபையாக கொணடுள்ளார்.

எஸ். கதிரேசப்பிள்ளை
BD, MTh
இவர் கல்குடா சுவிசேஷ பயிற்சி நிலையத்தின் அதிபராகவும் மெதடிஸ்த சபையின் வடகிழக்கு பிரதேச தலைவராகவும், திருப்பேரவை காரியதரிசியாகவும் கடமையாற்றியுள்ளார். நீண்டகாலமாக மெதடிஸ்த திருச்சபையினை தனது ஆராதிக்கும் சபையாக கொண்டுள்ளதுடன், அதன் போதகராகவும் பணியாற்றி வருகின்றார்.

கே. யாபேஸ்
BTh, MA (candidate)
கொழும்பு இறையியல் கல்லூரியின் பட்டதாரியான இவர் AOG திருச்சபையினை தனது ஆராதிக்கும் சபையாகவும், அதன் போதகராகவும் பணியாற்றுவதுடன், திருச்சபைகளில் கற்பித்தல், பிரசங்கித்தல் தலைமைத்துவ பயிற்சியளித்தல், வேதாகம கல்லூரியில் கற்பித்தல் போன்ற பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்.

வி. கிறிஷாந்தி சந்திரசேகர்
Dip (Counseling), BTh
கொழும்பு இறையியல் கல்லூரியின் பட்டதாரியும், சமூக அபிவிருத்தி தேசிய நிறுவனத்தின் (National Institute of Social Development) ஆற்றுப்பணியில் பட்டச்சான்றிதழை பெற்றவருமான இவர், குடும்பங்கள் மத்தியிலே ஆற்றுப்பணியிலே ஈடுபட்டு வருகிறார். வத்தளை, சீயோன்மலை கூடார திருச்சபையை தனது ஆராதிக்கும் சபையாக கொண்டுள்ளதுடன், அதன் நிர்வாக சபையின் காரியதரிசியாகவும், ஞாயிறு பாடசாலை கண்காணிப்பாளராகவும், தெமட்டகொட, கிரேஸ் வேதாகம நிறுவனத்தின் வேதாகம கல்வி ஆசிரியராகவும் கடமையாற்றுகின்றார்.

மகேஸ்வரன் மாணிக்கராஜா
BTh, MA (candidate)
கொழும்பு இறையியல் கொழும்பு இறையியல் கல்லூரியின் பட்டதாரியான இவர் கொழும்பு, மக்கள் தேவ சபையினை தனது ஆராதிக்கும் சபையாக கொண்டுள்ளதுடன், அதன் போதகராகவும் பணியாற்றி வருகின்றார்.

நிரஞ்ஜனி இராஜரட்ணம்
HND (Counselling), BTh, MSc (candidate)
கொழும்பு இறையியல் கல்லூரியின் இளமாணி பட்டதாரியும், பகுதி நேர கல்விப்பீட உறுப்பினருமான இவர் தற்போது மருத்துவ உளவியல் முதுமாணி பட்டப்படிப்பினை கற்றுக்கொண்டிருக்கிறார். World Vision Sri Lanka நிறுவனத்தில் 15 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறார். The Salvation Army Sri Lanka தலைமையகத்தில், சிறுவர் நிகழ்ச்சி திட்டங்கள் தொடர்பான அறிவுரை ஆலோசகராகவும் மற்றும் Wesley Collegeஇல் மாணவ ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார். Child Rights Activistஆக இருப்பதுடன், திருச்சபைகள் மற்றும் கிறிஸ்தவ நிறுவனங்களுடன் இணைந்து ஆலோசகராக பணிபுரிந்து வருகின்றார்.

யொஹான் கிருஷ்ணகுமார்
BTh, MTh
நோர்ட்டன் பிரிட்ஜ் SAIT கலாசாலையில் இளமாணி பட்டத்தையும் வேல்ஸ்ஸின் Bangor பல்கலைக்கழகத்தில் நடைமுறை இறையியலில் முதுமாணி பட்டத்தையும் Global Institute of Theology (WCRC)-ல் சீர்திருத்த இறையியல் பட்டத்தையும் பெற்ற இவர் கண்டி City Mission நிறுவனத்தின் நிகழ்ச்சி ஒருங்கமைப்பாளராகவும், உள்ளுர் மற்றும் வெளியூர் வேதாகம கலாசாலைகளில் விரிவுரையாளராகவும், தனது உள்ளுர் திருச்சபையில் இளைஞர் ஊழிய பணியாளராகவும் மூப்பராகவும் சேவையாற்றுகின்றார். கண்டி, பிரஸ்படேரியன் திருச்சபையை தனது ஆராதிக்கும் சபையாக கொண்டுள்ளார்.

யோகநாதன் பகீரதன்
BA (Hons), MA
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பட்டதாரியான இவர் பல்கலைக்கழக கிறிஸ்தவ மாணவர்கள் ஜக்கியத்துடன் (FOCUS) இணைந்து பல்கலைக்கழக கிறிஸ்தவ மாணவர்கள் மத்தியில் பணியாற்றி வருகிறார். இவர் யாழ்ப்பாணத்தில் உள்ள சீயோன் திருச்சபையினை தனது ஆராதிக்கும் சபையாக கொண்டுள்ளார்.

தனராஜ் அஜேந்திரன்
BTh, MA
கொழும்பு இறையியல் கல்லூரியின் பட்டதாரியான இவர், இலங்கை கிறிஸ்தவ சீர்திருத்த திருச்சபையினை தனது ஆராதிக்கும் திருச்சபையாக கொண்டுள்ளதுடன், கடந்த 13 வருடங்களாக வெள்ளவத்தை கிளையில் ஆரம்ப பணியில் ஈடுபட்டவருமாவார். தற்போது மலையகத்தில் ஹட்டன் பகுதியில் அருட்பணி ஊழியத்தில் ஈடுபட்டு வருகிறார். திருச்சபை ஸ்தாபித்தல், சீஷத்துவம், வாலிபருக்கான பயிற்சி மற்றும் இறையியல் கல்லூரிகளில் கற்பித்தல் பணிகளில் தன்னை அர்ப்பணித்துள்ளார்.

ஞா. ஸ்டன்லி நெல்சன்
BTh, MMin
கொழும்பு இறையியல் கல்லூரியிலும் அதன் யாழ்ப்பாண கல்வி நிலையத்திலும் முன்னாள் பகுதி நேர விரிவுரையாளராக சேவையாற்றியுள்ள இவர் சிங்கப்பூர் திரித்துவ இறையியல் கல்லூரியின் இளமாணி மற்றும் முதுமாணி பட்டதாரியாவார். இலங்கை தேசிய கிறிஸ்தவ சுவிசேஷ கூட்டணியின் முன்னாள் தலைவராகவும், இலங்கை கிறிஸ்தவ சீர்திருத்த திருச்சபையின் முன்னாள் தலைவராக பணியாற்றியுள்ளதுடன், தற்போது அத்திருச்சபையின் செயலாளராகவும், அதன் இறையியல் கல்வியகத்தின் அதிபராகவும், தெஹிவலை சபையின் போதகராகவும் பணியாற்றுவது குறிப்பிடத்தக்கது. அத்துடன் இலங்கை தேசிய கிறிஸ்தவ மன்றத்தின் திருச்சபை ஒருமைப்பாட்டுக்கான ஆணைக்குழுவின் தற்போதைய தலைவருமாவார்.

மோகன் இதயகுமார் அழகக்கோன்
BTh, MA (candidate)
கொழும்பு இறையியல் கல்லூரியின் பட்டதாரியான இவர், கிறிஸ்துவிற்காக இளைஞர் ஸ்தாபனத்தில் பயிற்சி நிர்வாக இயக்குனராகவும், சப்பிரகமுவா, களுத்துறை பிரிவுகளுக்கு ஊழிய பொறுப்பாளராகவும் கடமையாற்றி வருகின்றார். கடந்த 30 ஆண்டுகளாக யாழ்ப்பாணம், மன்னார், மட்டக்களப்பு, கொழும்பு பகுதிகளில் இளைஞர்கள் மத்தியில் ஊழியம் செய்வதுடன் இளம் தலைவர்களுக்கு பயிற்சி கொடுப்பவராகவும் பணியாற்றுகிறார். இவர் வெள்ளவத்தை, மூர் வீதியிலுள்ள மெதடிஸ்த திருச்சபையை தனது ஆராதிக்கும் சபையாக கொண்டுள்ளார்.

ஜேசன் செல்வராஜா
BTh, MA (candidate)
கொழும்பு இறையியல் கல்லூரியின் முன்னாள் கல்விப்பீட உறுப்பினரான இவர், AOG கைதடி சபையினை தனது ஆராதிக்கும் சபையாக கொண்டுள்ளதுடன், அதன் தலைமை போதகராகவும் சேவையாற்றுகிறார். அத்துடன் “Simply mobilizing SL” இன் தேசிய இணைப்புக்குழுவின் அங்கத்தவராகவும், சிவில் உரிமை அமைப்பாகிய யாழ் மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் இணையத்தின் அங்கத்தவருமாவார்.

இணைக்கப்பட்டோருக்கான செய்திமடல்

மேலும் தகவல்களை பெற எங்கள் இணைக்கப்பட்டோருக்கான செய்திமடலில் இணைக
தமிழ்