கொரோனா வைரஸ் உலகில் தேவன் எங்கே?

ஜோன் சி. லெநொக்ஸ் இனது தற்காலத்திற்குரிய வளங்களில் ஒன்றான இந்நூல் தற்போது சிங்களம் மற்றும் தமிழில் பெற்றுக்கொள்ள முடியும்.

நாம் தனித்துவமான யுகத்தை வரையறுக்கும் காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எமது உகலகக்கண்ணோட்டம் எதுவாக இருப்பினும், எமது நம்பிக்கைகள் எதுவாக இருப்பினும், எமது பழைய உறுதிப்பாடுகள் யாவும் மறைந்து விட்டன. எம் அனைவருக்குமே, பெரும் கொள்ளைநோயான கொரோனா வைரஸ் மற்றும் அதனுடைய தாக்கங்கள் குழப்பமானவையாகவும், அமைதியற்றதாகவும் உள்ளது. அதை குறித்து நாம் எவ்வாறு சிந்திக்க ஆரம்பிக்க போகிறோம்? எவ்வாறு சமாளிக்க போகிறோம்?

ஓக்ஸ்வேர்ட் பல்கலைக்கழகத்தின் கணிதத்திற்கான பேராசிரியரான ஜான் சி லெநொக்ஸ் கொரோனா வைரஸினை வெவ்வேறுபட்ட நம்பிக்கைகளின் ஒளியில் ஆராய்வதுடன், கிறிஸ்தவ உலகக்கண்ணோட்டத்தை அர்த்தமுள்ளதாக்க உதவுவது மாத்திரமல்ல, அவை உண்மையான நம்பிக்கையை பற்றிக்கொள்ளும்படிக்கு உதவுகிறார். தற்போதைய காலகட்டத்திற்கு ஏற்ற இந்த நூலின் சிங்கள மற்றும் தமிழ் பதிப்புகளை மொழிபெயர்த்து வெளியிடும் சிலாக்கியத்தை CTS பெற்றது. தி குட் புக் நிறுவனத்தின் பெருந்தன்மையினால், மேற்கூறப்பட்ட இரண்டு பதிப்புகளையும் எண்மின் (டிஜிட்டல்) முறையில் இலவசமாக பெற்றுக்கொள்ள முடியும்.

உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்